பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
12:06
ஆரணி: ஆரணி அருகே, மழை வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து, கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடும் வறட்சியால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தால் ஆடு, மாடுகளுக்கு பசுந்தீவனம் விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் குடிக்கவும் தண்ணீர் இல்லை. இதனால், மழை வேண்டி, ஆரணி அருகே உள்ள வடுகசாத்து கிராம மக்கள், அக்கிராமத்தில் காவல் தெய்வமாக விளங்கும் அங்காளம்மன் கோவில் முன், நேற்று காலை, இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து வழிபட்டனர். இதில், அந்த கிராமத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கழுதைகளுக்கு திருமணம் செய்து முடித்தவுடன், அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் விருந்து பரிமாறப்பட்டது.