பதிவு செய்த நாள்
27
ஜூன்
2017
03:06
மாமல்லபுரம்: மாமல்லபுரம் மல்லிகேஸ்வரி, மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த சிவபெருமான் கோவிலான இது, வழிபாடின்றி சீரழிந்திருந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து, 2004ல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 12 ஆண்டுகள் கடந்து, ஜூலை 6ல், மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, புதிய நடராஜர் சன்னிதிக்கு வண்ணம் தீட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புதிய கொடிமரம் அமைக்க, பக்தர்கள் வலியுறுத்தினர். அவர்கள் நன்கொடை மூலம், 25.5 அடி உயரம், 3.5 அடி சுற்றளவுடைய கொடிமரம் உருவாக்கப்பட்டு, நேற்று காலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.