ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2017 03:06
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, நாளை துவங்குகிறது. ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா, நாளை (28ம் தேதி) துவங்குகிறது. மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து தினமும் சர்வ அலங்காரத்துடன் பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலாவும், ஜூலை 6ம் தேதி பிரம்மோற்சவ விழாவும் நடக்கிறது.