சோழவந்தான்: மதுரை திருவேடகத்தில் ஏலவார் குழலியம்மை ஏடகநாதர் கோயில் கும்பாபிஷேகம் நாளை(ஜூன் 28) நடக்கிறது. இதை முன்னிட்டு, ஜூன் 23ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கும்பாபிஷேக பூஜை துவங்கியது. விக்னேஷ்வரர் பூஜையை தொடர்ந்து வாஸ்து சாந்தி பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 9:00 மணிக்கு நான்காம்கால யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணிக்கு ஐந்தாம்கால பூஜையை தொடர்ந்து, நாளை காலை 5.30 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் காலை 9:01க்கு கடம் புறப்பாடு, 9:20 மணிக்கு விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும், 9:45மணிக்கு சுவாமி, அம்மன் மூலஸ்தான மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.