சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம்: இருமுடி கட்டுடன் வந்தது யானை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2017 11:06
சபரிமலை: சபரிமலையில் ஆராட்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஐயப்பன் விக்ரகத்தை சுமக்கும் யானை இருமுடி கட்டுடன் நேற்று சன்னிதானம் வந்தது.
சபரிமலையில் 10 நாள் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு புதிய கொடிமரத்துக்கான பணிகள் நடைபெற்று வந்ததால் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறவில்லை. கடந்த 25-ம் தேதி புதிய தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து திருவிழா இன்று காலை தொடங்கியது. காலை ஏழு மணிக்கு கொடிமர பிரதிஷ்டையின் நான்காம் கலச பூஜையும், தொடர்ந்து 8.40 மணிக்கு கொடிப்பட்டத்துக்கு பூஜை நடைபெற்றது. 9.15 மணிக்கு தங்க கொடிமரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றினார். இன்று முதல் ஜூலை ஆறாம் தேதி ஒன்தாம் திருவிழா வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஸ்ரீபூதபலி நடைபெறும். நாளை இரண்ாம் திருவிழா முதல் ஒன்தாம் திருவிழா வரை பகல் 12.30 மணிக்கு உற்சசவபலி நடைபெறும். ஜூலை இரண்டாம் தேதி ஐந்தாம் திருவிழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை ஸ்ரீபூதபலியுடன், யானை மீது சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை ஆறாம் தேதி நள்ளிரவில் சசரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். ஏழாம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி அன்று இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். திருவிழா நாட்களில் ஐயப்பனின் விக்ரகத்தை சுமக்க திருவல்லா ஸ்ரீவல்லபசுவாமி கோயிலில் இருந்து ஜெயராஜன் என்ற யானை இருமுடி கட்டுடன் நேற்று சன்னிதானம் வந்தது. கொடிமரம் அருகே வந்த யானை ஐயப்பனை தும்பிக்கை உயர்த்தி வணங்கியது.