ஜம்மு: அமர்நாத் யாத்திரை இன்று துவங்குவதை அடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். இந்த ஆண்டுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று(ஜூன் 28) துவங்கியது. 4 ஆயிரம் பக்தர்களை கொண்ட முதல் குழு, ஜம்முவில் இருந்து இன்று பயணம் மேற்கொள்கிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.