சோழவந்தான், சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார் குழலியம்மை, ஏடகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை ஜூன் 23ம் தேதி துவங்கியது. நேற்று காலை 9:01க்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:35 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் ஏலவார் குழலியம்மை, ஏடகநாதர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பரம்பரை அறங்காவலர் சேவுகன் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.