பதிவு செய்த நாள்
30
ஜூன்
2017
12:06
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், அமர்நீதி நாயனார் குருபூஜை நேற்று நடந்தது. சோழநாட்டில், பழையாறை பகுதியில், ஏழாம் நுõற்றாண்டில் பிறந்தவர் அமர்நீதி நாயனார். வணிகரான அவர், பெரும் செல்வந்தராகவும் இருந்தார். எனினும், சிவத்தொண்டு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சிவனடியார்களுக்கு திருவமுது கொடுப்பதற்காக, திருநல்லுõரில் மடம் கட்டினார். அமர்நீதி நாயனாருக்கு, சிவபெருமாள் அருள் புரிய எண்ணி, பிரமச்சாரியாக மடத்துக்கு வந்தார். அணிந்திருந்த கோவணத்தை கொடுத்து, பத்திரமாக வைக்குமாறு கூறி, காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, கோவணம் இறைவனால் மாயமாக்கப்பட்டது.
சினங்கொண்ட பிரம்மச்சாரி, தனது கோவணத்துக்கு இணை இல்லை; எனவே, அதை தராசில் வைத்து, அதே எடைக்கு பொருள் வழங்க வேண்டும் என்றார். தராசின் ஒரு புறம், பிரம்மச்சாரி வேடத்தில் இருந்த இறைவனின் துணியும்; மற்றொரு புறம், மடத்தில் இருந்த <உடை, உணவு, பொன், பொருள், அமர்நீதி நாயனார் மனைவி, மக்கள் என அனைத்தும் வைத்தும், சமநிலைக்கு வர வில்லை. இதனால், தவறு இழைக்கவில்லை என்றால், தராசு சம நிலையை அடையட்டும் என்றவாறே, அமர்நீதி நாயனார் ஏறி நின்றார். தராசு சமநிலையை அடைந்ததோடு, சிவபெருமான் அம்மையப்பராக காட்சியளித்து, சிவலோக வாழ்வு அளித்தார். அவரது பிறந்த நாளான, ஆனி மாத மகம் நட்சத்திரத்தில், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் எழுந்தருளியுள்ள, அமர்நீதிநாயனாருக்கு, அர்த்தசாம பூஜை சிவன டியார் திருக்கூட்டம் சார்பில், நேற்று குரு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் வழிபட்டனர்.