சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் ஆனித்தேரோட்ட விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2017 02:06
சாத்தூர்: சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் ஆனித்தேரோட்டம் கொடியேற்றத்துடன் துவங்கியது. சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் பழமையான கோவில் இக்கோவில் தென்திருப்பதி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. சாத்தூரப்பன் என்ற பெயர் கொண்டு வெங்கடாசலபதி சுவாமி,பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராய் அருள்பாலித்து வருகிறார். இக் கோவில் ஆனித்தேரோட்டம் ஆண்டு சிறப்பாக நடைபெறும்.
இந்த வருடம் ஆனித்தேரோட்டம் வரும் 8 தேதி காலை 10.15 மணிக்கு நடைபெறுவதை முன்னிட்டு, இன்று காலை 9.30 மணிக்கு திருவிழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் கொடி மரத்திற்கு ரெங்கநாதபட்டர் விசேஷ அபிேஷகம் மற்றும் பூஜைகள் செய்து தீபாரதனை காண்பித்து கொடியேற்றினார். சாத்தூர் நகரின் முக்கிய பிரமுகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து நாள் தோறும் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு மண்டகப்படியார்கள் சார்பில் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.