பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
12:07
நயப்பாக்கம்: நயப்பாக்கம், மாசிலாமணீஸ்வரர் கோவிலில், வரும் 5ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், நயப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது நேத்ரதாயினி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவில். 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது.முன்னதாக, வரும் 3ம் தேதி, காலை 7:00 மணிக்கு, கணபதி ஹோமமும், புதிய சிலைகள் கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். பின், மாலை முதல்கால யாகசாலை பூஜையும், பூரணாஹூதியும் நடைபெறும். மறுநாள் 4ம் தேதி காலை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். கும்பாபிஷேக தினமான, 5ம் தேதி, காலை 6:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 10:00 மணிக்கு, கடம் புறப்பாடும், அதன்பின், கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், நடைபெறும்.