பதிவு செய்த நாள்
03
ஜூலை
2017
12:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பாண்டுரங்க ருக்மணி சுவாமியின், 81வது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடக்கிறது. கிருஷ்ணகிரி அடுத்த சிவாஜி நகர் அக்ரஹாரம் கிராமத்தில், விநாயகர், விட்டல் ரகுமாயி கோவிலில், மாதா அம்பா பவானியின், 81வது ஆண்டு சப்தா பிரம்மோற்சவ விழா, நாளை துவங்கி, வரும், 10 வரை நடக்கிறது. இதையொட்டி, நாளை காலை கணபதி அபிஷேக ஆராதனை நடக்கிறது. 4 காலை நவக்கிரக பூஜை, விட்டல் ரகுமாயி, அம்பா பவானி அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை விட்டல் ரகுமாயி உற்சவமூர்த்தி ஊர்வலம் நடக்கிறது. 8 காலை அம்பா பவானி தேவிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், இரவு, 10:00 மணிக்கு பண்டரி பஜனை கோபால காலா நிகழ்ச்சி நடக்கிறது. 9 காலை, 10:00 மணிக்கு ருக்மணி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு சுவாமி நகர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பாண்டுரங்க ருக்மணி பக்த மண்டலி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.