இந்த மாதம் சனீஸ்வரரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். குருவால் எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுக்கிரன் ஜூலை 25 வரையில் நன்மை தருவார். புதன் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 5- வரை வெற்றிகளை வாரி வழங்குவார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து கடக ராசிக்கு மாறுவதால் நன்மை பெற முடியாது.
8-ம் இடமான சிம்மத்தில் இருக்கும் ராகு முயற்சியில் தடை, குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்தி இருப்பார். உறவினர்கள் வகையிலும் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டிருக்கும். அவர் ஜூலை 27ல் 7-ம் இடமான கடகத்திற்கு செல்வதால் இடப்பெயர்ச்சி ஏற்படலாம். 2-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, பகைவர் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் ஏற்படுத்தி இருப்பார். அவர் ஜூலை 27ல் உங்கள் ராசிக்கு வருவதால் உடல் உபாதை உருவாகலாம்.
குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உங்களை எதிர்ப்பவர் கூட சரணடையும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் வழியில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். ஜூலை 21- முதல் ஆகஸ்ட் 5- வரை புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். அதன் பிறகு குடும்பத்தில் குழப்பம் உருவாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆகஸ்ட் 1,2,3- ல் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் ஏற்படும். ஜூலை 17,18, ஆகஸ்ட் 13,14 ல் அவர்கள் வகையில் பிரச்னை வரலாம். ஒதுங்கி இருக்கவும். சூரியனால் வீண்அலைச்சல், பணவிரயம் ஏற்படலாம். உடல்நலனில் அக்கறை தேவை.தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். சக தொழிலதிபர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டை மறையும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜூலை 21,22- ல் எதிர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆக.4,5,9,10-ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.
பணியாளர்கள் ஜூலை 21- முதல் ஆக.5- வரை சிறப்பான முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மாதத் தொடக்கத்திலும், மாத இறுதியிலும் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர். ஜூலை 25- க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். அரசியல்வாதிகள் பொது நல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். பொருளாதார வளத்தில் குறை இருக்காது. ஜூலை19,20, ஆக.15,16-ல் வீண் குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் குருவின் சாதகத்தால் கல்வி வளர்ச்சி காண்பர். நண்பர்களின் உதவி வளர்ச்சிக்கு துணைநிற்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஜூலை 20க்கு பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால் நற்பெயர் எடுப்பர். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். குறைந்த முதலீட்டில் பயிர் செய்வது நல்லது. புது சொத்து வாங்க சில காலம் பொறுத்து இருக்க நேரிடும். வழக்கு, விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். அரசாங்க வகையில் சலுகை கிடைக்க வாய்ப்புண்டு.
பெண்கள் வாழ்வில் நற்பலன் காண்பர். உங்களால் குடும்பம் சிறக்கும் தோழிகள் ஆதரவாக செயல்படுவர். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். ஜூலை 23,24- சிறப்பான நாட்களாக அமையும். சகோதரி களால் பண உதவி கிடைக்கும். சுப விஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்துடன் விருந்து விழா என அடிக்கடி செல்வீர்கள்.
நல்ல நாள்: ஜூலை 21, 22, 28, 29, 30, 31, ஆக.1, 2, 3, 6, 7, 8, 11, 12. கவன நாள்: ஜூலை 25, 26, 27- சந்திராஷ்டமம் அதிர்ஷ்ட எண்:3,7 நிறம்: மஞ்சள், கறுப்பு
பரிகாரம் * ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு. * தினமும் காலையில் சூரிய தரிசனம். * வெள்ளியன்று சுக்கிரனுக்கு நெய் தீபம்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »