நெல்லையப்பர் கோயிலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2017 03:07
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர திருவிழால் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. திரளான பெண்கள் பங்கேற்றனர்.
திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் நாளாம் திருநாளான இன்று (ஜுலை 20ல்) காலை 11 மணிக்கு காந்திமதியம்மன், வெண்பட்டு உடுத்தி, சுவாமி சன்னதிக்கு வந்தார். அங்கிருக்கும் உற்சவரிடம் தமக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். போய்வர அனுமதி தருமாறு கேட்டார். சுவாமி அனுமதியளித்தார். அம்பாள் அங்கிருந்து மதியம் 12 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திற்கு வருகை தந்தார். அங்கு வழக்கமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேற்கொள்வதைப்போல தலைவாரி, கண்ணாடியில் முகம்பார்த்து அலங்கரிக்கப்பட்டார். பின்னர் வளைகாப்பு விழா நடந்தது. வளைகாப்பு முடிந்ததும் கைநிறைய வளையல்கள் அணிந்த அம்பாள், சுவாமி சன்னதிக்கு சென்று அங்கிருந்த <உற்சவரிடம் மகிழ்ச்சி பொங்க தமக்கு வளைகாப்பு வைபவம் நடந்ததை தெரிவித்தார்.விழாவில் மாநகர போலீஸ் துணைகமிஷனர் சுகுணசிங்கின் மனைவி உள்பட திரளான பெண்கள் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு பிரசாதமாக வளையல்கள் வழங்கப்பட்டன. இதனை அணிந்து கொள்ளும் பெண்களின் குடும்பத்திலும் விரைவில் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூர விழாவின் பத்தாம் நாளான 26ம் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருநாள் நடக்கிறது.