Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பமார்களுக்கான முக்கிய ... சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதிகள் சபரிமலைக்கு செல்ல பேருந்து வசதிகள்
முதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்
ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 நவ
2011
12:11

நான், எனது என்று இல்லாத இடத்தில் ஆனந்த சித்தன் இறைவன்  ஐயப்பன் பிரகாசிக்கிறார் சுவாமியே சரணமய்யப்பா.

விநாயகர் வணக்கம்

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்

மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் 108 சரணக் கோவை

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்பன் கவசம்

கணபதி துதி

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

நூல்

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணிணைக் காக்க
நாராணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க
கலியுக வரதன் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணி கண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் மார்பினைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க
இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமரன் விரல்களைக் காக்க
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க
ஹரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்கக் காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க
கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி, சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா
கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன்திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே

நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

அகஸ்தியர் அருளிய ஐயப்ப மாலை

1. விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா முந்தன்
திருப்ப தம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே

2. வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம்

3. மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்

சபரிமலை மகாத்மியம்

4. சக்தியெல்லாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்திமெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெலாம் சபரிமலை சிற்பரமாம் சபரிமலை
புத்தியெலாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே

5. ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ரமலை ரிஷிகணங்களேத்து மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளஞ்சேர் மலை வளமே

6. கோடி மலைகளிலே கொழிக்கும் மலை எந்த மலை
வஞ்சி மலை நாட்டினிலே உயர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
ஜனகாதி முனிவ ரெல்லாம் தேடி வரும் சபரிமலை

7. ஹரிஹர புத்ரா போற்றி
அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி
எனையாள் குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி
சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி
ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தாவே போற்றி போற்றி

ஓம் தேவ தேவோத்தம தேவதா ஸார்வ பௌம
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீ பூர்ணா புஷ்களா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர
சுவாமின்.........ஜெய விஜயீ பவ

விருத்தம்

1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே

2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே

3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே

4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்
உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே

பிரார்த்தனை

1. குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்த்ததொரு தாய் பெற்றெடுத்த மாதா உமக்கினையோ
களத்தூரில் பதின்குலக் கன்னியர்கள் தந்தசெல்வம்
குளத்தூரிலே அய்யனென்றால் குற்றமொன்றும் வாராதே

2. மாணிக்க மாலை மகிழ்மாலை பூமாலை
காணிக்கைக் கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆனிப் பொன் மார்பன் அழகன் குளத்தூரானை
பேனித் தொழாய் நெஞ்சே பிழைகளொன்றும் வராதே.

3. கற்சரடு பொற்பதக்கம் கனத்த முத்துச் சுவடியுமாய்
மெய் கனியாய் அணிந்திருக்கும் விரகா உன் திருமேனி
தக்க மிட்டு வரும் பேயைத் தடியெடுத்து தான் விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக் கல்லாதிபனே

4. தூங்கும் செவி யொதிக்கி துதிக்கை யொரு கொம்பில்
நீங்காத மலைபோல் நிற்கு மந்தக் குஞ்சரங்காள்
பூங்காவிலே இருந்து புண்ணியரைத்தான் நினைத்தால்
பாங்கான மத கரிகள் பனிமலை போல் அகன்றிடுமே

5. பாரச் சுமடெடுத்துப் பதினெட்டாம் குன்றேறி
ஏத்தமெல்லாம் ஏறி இளைத்து வரும் அந்நேரம்
வேர்த்த தெல்லாம் பன்னீராய் வென்சாமரை வீச
கதித்த வல்லி குளத்தூரான் காந்தமலை காவலனே

6. செண்டார்ந்த கையன் எங்கள் ஸ்ரீமான் எங்கள் பிரான்
வீரமணிகண்டா அநுதினமும் காத்தருள வேணுமையா
தந்தாமரை வளரும் தவமுனிவர் வான வரும்
கொண்டாடும் தென்னிசை கூடபர சாஸ்தாவே

7. சீருடன் புவியில் செழுத்தவே மன்னரைக் காக்க
வீருடன் புலியைத் தாங்கி விண்ணவர் மேய்க்க வந்தாய்
ஆவினில் பெரியோனாகி ஆரியங்காவையா னென்றும்
பூர்ணமாக ஐயன் பொற்பாதம் போற்றுவோம்.

விருத்தம்

1. நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி
வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே
கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்
தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா

2. உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்
பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்
என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக
பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.

3. சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க
இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி
வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச
காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே

4. கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி
இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்
வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்
கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே

5. மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ
ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே

6. எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்
அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்
பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே

7. நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே

8. உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று
நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்
ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்
சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே

9. கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்

10. பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர
கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட
மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட
ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே

11. ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே
அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே
ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு
வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே

ஐயப்பன் பிரார்த்தனை விருத்தம்

1. கலியுகம் தன்னிலே கண்கண்ட கடவுளென்று
காத்திருக்கிறோம் ஐயா
ஏழையான அடியேனுக்கு நின் திருப்பாத தரிசனம்
தந்தருள தாமதம் ஏனோ
அனாத ரக்ஷகன் என்று அனவரதமும் போற்றிடும்
அடியார்க்கு நீர் அருள் ஞான
மெய்த் தருவாய் வந்து நல்லாதரவு அளித்து ஆட்கொண்டருள்வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரமஸ்தான மெய் ஞான குருவே

2. பரதேசியான அடியேன் அனுதினமும் வேண்டுவது
பாடினால் நின் சரண கீதங்கள் பாட வேண்டும்
உடுத்தால் உன் நீல ஆடை உடுக்க வேண்டும்
அணிந்தால் நின் துளஸி மாலை அணியவேண்டும்
சுமந்தால் நான் இரு முடி சுமக்க வேண்டும்
ஏறினால் நின் சபரிகிரி ஏற வேண்டும்
இரு முடிச் சுமையதும் சுமக்க முடியாமல் நான்
சரிமலை ஏறி வருந்துகின்ற சமயம்
தயவுடன் வந்தெனக்கு பாத பலமும் தந்து
திருவடி தந்தருள் வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரமஸ்தான
மெய் ஞான குருவே

தாயாகி தந்தையுமாய்

தாயாகி தந்தையுமாய் நீயும் வளர்த்தாய்
தரணியிலே உன்னைப் போல தெய்வம் இல்லை ஐயப்பா
மானிடரை வாழவைக்கும் தெய்வமன்றோ நீயே
மனதை யெல்லாம் அடங்க வைக்கும் சக்தியன்றோ நீயே
இச்சையெல்லாம வென்றுவிட்ட வீரனன்றோ
இம்மையிலும் மறுமையிலும் குருவுமய்யா
ஹரிஹரனின் மைந்தனாக கலியுகத்தில் பிறந்தாய்
பந்தளத்து பாலகனாய் பாரினில் நீ வளர்ந்தாய்
அரக்கிதனை வதம் செய்து சபரிமலை மீது
அமர்ந்து என்னை ரக்ஷிக்கும் ஐயப்பா தெய்வமே

சபரி பஞ்சங்கம்

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம் சூர்ப்பகா ஸுரன்
தவமிருந்து கை வைத்த பேர் சிரஸுதுய்ய
நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம குருவாம் ஹரன் அருளினோ மென் ரவுடன் அவன்
சிரஸினில் கரம் வைத்திடச் சென்றடுத்தான்
வள்ளல் ஐவரளியில் ஒளிந்தா ரென்று மாலறிந்து ஓடிவந்து
தருண மோஹினியாய் அஸுரனை வெண்ணீறாக்கிச்
சம்புவை அணைந்து பெற்ற ஸந்ததிப் பொருளாக வந்த
என் கண்மணியே! ஸங்கடம் தீரும் ஐயா!
சரணம் அய்யப்பா என்று உருகும் அன்பர்க்கு நீர்
ஸகல ஸெள பாக்கியமும் தந்து உதவும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரம ஸ்தான
மெய் ஞான குருவே!

பால் குருநாதர்

1. பால் குருநாதா சரணமய்யப்பா
எங்கள் குருநாதனே சரணமய்யப்பா
நல்ல வழி தந்திடுவார் சரணமய்யப்பா - எங்கள்
நடமாடும் தெய்வமே சரணமய்யப்பா (பால்)

2. திருமந்திர நகர மதில் மகிழும் பாலன் - ஈசன்
திருவருளை பெற்றவராம் சரணமய்யப்பா
அன்புள்ளம் கொண்டவராம் சரணமய்யப்பா - எங்களை
ஆதரிக்கும் தெய்வமாம் சரணமய்யப்பா (பால்)

3. இல்லை இல்லை இல்லை என்றும் ஏங்கும் மாந்தரின்
உள்ளம் தனைக் குளிர வைப்பார் சரணமய்யப்பா
பிணியகல வழி வகுக்கும் என் குருநாதன் - ஞான
பணிபுரிய அருள் புரிவார் சரணமய்யப்பா (பால்)

4. வினை யறுத்து பவமழிக்கும் என் குருநாதன்
நம்மைத் துணை இருந்து காத்திடுவார் சரணமய்யப்பா
பக்தி முக்தி தாயகனே சரணமய்யா - நம்
பக்தர்களை காத்திடுவார் சரணமய்யப்பா (பால்)

ஓம் நமோ ஐயப்ப தேவா

1. ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ நமோ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ  (ஓம்)

2. எனது நான் எனச் செருக்கி மமதை உற்றலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே
ஒருகனத்துள் என துளத்தை உருக வைத்த எனது நாமம்
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ (ஓம்)

3. அரியுமான சிவனுமான ஆண்டவனின் மைந்தனாகி
அல்ல லெல்லாம் தீர்க்க வந்த அன்பு தெய்வமே
அன்பினாலே ஆளவந்த அன்பர்களைக் காத்திடவே
அவதரித்து பூவுலகம் வந்த சாமியே (ஓம்)

4. ஆதியோடு அந்தமாகி ஆரியங்காவு பாலனாகி
ஆதிசக்தி மகனுமாக வந்த மூர்த்தியே
ஆண்டவனின் பிள்ளையான எங்களையே காத்திடவே
ஆவலோடு வந்த எங்கள் காந்த ஜோதியே (ஓம்)

5. எரிமேலி சாஸ்தாவாகி எல்லோர்க்கும் தேவனாகி
எங்கள் குல தெய்வமாக வந்த ஜோதியே
எந்தன் துயர் போக்கி நீயும் எங்களைக் காத்திடவே
ஏகாந்த மூர்த்தியாக வந்த தெய்வமே

6. பதினெட்டாம் படியனாகி பம்பைநதி வாசனாகி
பக்தர்களைக் காக்க வந்த எங்கள் ஜோதியே
பக்தியுடன் பூஜை செய்து சுத்தமான மனதுடனே
நித்தமும் காத்தருள்வாய் நீதிதேவனே

கற்பூர ஹாரத்தி ஹீதம்

பாஹி பாஹி மணிகண்டா
மாமலைவாசா மணிகண்டா
வன்புலி வாகனா மணிகண்டா
வானவர் பூஜித மணிகண்டா
மகிஷி மர்த்தனா மணிகண்டா
மோகன நாசனா மணிகண்டா
மோகினி சுதனே மணிகண்டா
மத கஜ வாகனா மணிகண்டா
மார்க்க பந்தோ மணிகண்டா
சபரிகிரீஸ்வரா மணிகண்டா
சாஸ்தவ ரூபா மணிகண்டா

சுவாமியே சரணம் ஐயப்பா

மங்கள ஆரத்தி

மங்களனே மாதவனே
சங்கரனே சதாசிவனே
பாண்டியனார் பாலகனே
காந்தமலை வாசனே

ஸ்ரீ சக்ரபீடமதில் கொலுவிற்கும் எங்கள் ஐயப்பனே

ஐயப்பனை வேண்டுதல்

1. ஓங்காரத்தின் தத்துவ ரூபனே
2. தாரகப் பிரம்மமே
3. சத்திய ரூபனே
4. பூத கண நாதனே
5. புண்ணிய மூர்த்தியே
6. அரனுர் மைந்தனே
7. பந்தளத்தரசன் மகிழ் பாலகனே
8. தேவ தேவனே
9. மணிகண்ட  பொருளே
10. அசுரர் காலனே
11. அன்பின் வடிவமே
12. கருணை கண்ணனே
13. கிருபைக் கடலே
14. துன்பம் துடைப்பவனே
15. கலியுக வரதனே
16. ஐயனே மெய்யனே
17. ஸச்சி தானந்தனே
18. மோகினி சுதனே
19. சுந்தர வடிவமே
20. மெய் ஞான பொருளே

உனது திவ்ய பாதார விந்தங்களுக்கு எங்களது ஆனந்த கோடி நமஸ்காரம்.

சகல செல்வங்களும் தரும் இமையகிரி ராஜ தன்ய மாதேவனே நின்னைச் சத்தியமாய் நித்தமும் உள்ளத்தில் துதிக்கும் எழியோர்களுக்கு இரங்கி அருளி அகிலமதில் நோய்ன்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, வாழ்நாள் வெற்றி ஆகும். நன்னூல் நுகர்ச்சி தொகை தரும் பதினாறும் பேரும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலனே அநுகூலனே மங்கள வாசனே மகவு நாங்கள் தந்தை நீர் அத்தனையும் எங்களுக்கு அளிக்க வொண்ணாதோ மகிமை வளர் திரு சபரிகிரியில் வாழும் எங்கள் ஐயப்ப தெய்வமே, சரணம் சரணம் ஐயப்பா

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய சபரி கிரிஷா நதோ நம
பூர்ணை புஷ்கலை நாதா நமோ நம
அருள் தாராய் சுவாமி

சாந்தி சாந்தி சாந்தி

ஓம் த்ரியம்பகம் பஜா மஹே ஸுகந்தீம்
புஷ்டி வர்த்தனம்
உர் வாருக மிவ பந்தனாத் மிருத்யோர்
மூக்ஷிய மாம் ரு தாத்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
சாந்தி சாந்தி சாந்தி ஓம்

என் நினைவிலும் ஐயப்பா

1. என் நினைவிலும் ஐயப்பா என் கனவிலும் ஐயப்பா-எங்கள்
நீலகண்டன் கண்ணில் வந்தாய் நிர்மலனே ஐயப்பா

2. மாயன் அன்று மோகினியாய் மகிழ்ந்தனைத்த ஐயப்பா-எனத்
தூயவனே துணைவனே என் தோழனே ஐயப்பா

3. மலைமகளும் கலைமகளும் அனைத்தெடுத்த ஐயப்பா....பல
கலைகளிலே விளையாடும் கண்மணியே ஐயப்பா

4. சபரிமலை தெய்வமே என் சாஸ்தாவே ஐயப்பா-நீ
அபயமளித்துக் காத்திடுவாய் ஐயாவே ஐயப்பா

5. நித்திய வஸ்துவாகி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா-உன்
தத்துவ காட்சி காணத் தனித்து வந்தேன் ஐயப்பா

6. கலியுகத்தின் கடவுள் என்றே காண வந்தேன் ஐயப்பா-உன்
கலிகள் நீங்கக் கண்திறந்தே காத்தருள்வாய் ஐயப்பா

7. பாண்டிபதி நாயகனே பாலகனே ஐயப்பா-உன்னை
வேண்டி நின்றே வரம் கேட்பேன் வேதியனே ஐயப்பா

8. மன்னவர்க்கு மன்னவனே மக பதியே ஐயப்பா-இந்த
மானிலத்தை ஆள்பவனே மறையோனே ஐயப்பா

9. பொன்னுரங்க பூபதியே பூசுரனே ஐயப்பா-என்றும்
எண்ணுள்ளே விளையாடி இன்ப மருள் ஐயப்பா

10. வண்ண வண்ணக்களஞ்சியமே வடிவழகா ஐயப்பா-என்
எண்ணமதில் கலந்திருப்பாய் என் துரையே ஐயப்பா

11. காவியத்தில் கலந்து நின்றாய் காரணனே ஐயப்பா-உன்னை
ஓவியத்தில் அமர்த்தி என்றும் ஓதுகிறேன் ஐயப்பா

12. நீரணிந்த மேனியனே நிறைமதியே ஐயப்பா-நல்ல
நீல வண்ணக் கட்டழகா நீ வருவாய் ஐயப்பா

13. ஆடுகின்ற அன்பருள்ளே ஆடுகிறாய் ஐயப்பா-உன்னைப்
பாடுகின்ற பண்களிலே பரவி நிற்பாய் ஐயப்பா

14. ஜாதிபேதம் அறியாத சாஸ்தாவே ஐயப்பா- எங்கும்
நீதியிலே நிறைவு காண நீ வருவாய் ஐயப்பா

15. கற்பூர ஜோதி கரைந்து நின்றாய் ஐயப்பா-உன்
பொற்பாதம் காண வந்தேன் பூரணனே ஐயப்பா

16. காடுமலைகள் ஆறுதாண்டி காணவந்தேன் ஐயப்பா-என்
ஒடுமனதை உள்ளடக்கி உணர வைப்பாய் ஐயப்பா

17. மலைகளிலே பல மலைகள் தாண்டி மகிழ்ந்து வந்தேன் ஐயப்பா
மகரஜோதி காணவந்தேன் மணிகண்டனே ஐயப்பா (நான்)

18. பம்பா நதியில் நீராடிப்பணிந்து வந்தேன் ஐயப்பா-ஸ்ரீ
ஜெகதாம்பாள் மகிழும் தேவனே என் ஐயப்பா

19. நீரணிந்துன் நினைவில் வந்தேன் நிதிபதியே ஐயப்பா-இப்
பாரினிலே பாடியாடிப் பார்க்க வந்தேன் ஐயப்பா

20. பனிமலைமேல் பவனிவரும் பரம்பொருளே ஐயப்பா-இப்
பதினெட்டாம் படியேறிப் பணிந்து வந்தேன் ஐயப்பா

21. கோழை எந்தன் குணமறிந்து குறைத் தீர்ப்பாய் ஐயப்பா-நான்
ஏழை என்று அறியாயோ ஏகனே என் ஐயப்பா

22. யானை புலிக் கூட்டம் கண்டால் சரணம் என்பேன் ஐயப்பா-நீ
எதிரில் வந்து காத்தருள்வாய் என் ஐயனே ஐயப்பா

23. தாய் தந்தையும் நீயல்லவோ தாரகனே-ஐயப்பா இதை
ஆய்ந்தறிந்தே அண்டி வந்தேன் ஆதரிப்பாய் ஐயப்பா

24. குருவெனக் கொண்டாடி வந்தேன் குணமணியே ஐயப்பா-என்
குலதெய்வம் நீயல்லவோ குணநிதியே ஐயப்பா

25. கருணையுள்ள கற்பகமே கலிவரதா ஐயப்பா-நல்ல
களைத்து வரும் நடுவழியில் கை கொடுப்பாய் ஐயப்பா

26. வருந்துகின்றேன் வாடுகின்றேன் வாழ்வளிப்பாய் ஐயப்பா-நல்ல
மருந்தாகி நீ வருவாய் மலையரசே ஐயப்பா

27. வருமை நீக்கி வரந்தருவாய் வரதனே என் ஐயப்பா-என்
சிறுமை கண்டு இறங்காயோ சீலனே என் ஐயப்பா

28. அடியார்க்கு எளியவனே ஆனந்தனே ஐயப்பா-உன்
அடிபணிந்தேன் ஆதரிப்பாய் ஐயாவே ஐயப்பா

29. அன்னதானம் செய்திடவே அருள் புரிவாய் ஐயப்பா-என்
கருமவினை தீர்த்தருள்வாய் கலிவரதா ஐயப்பா

30. வாழி சொல்லி வாழ்த்தி வந்தேன் வரம் அளிப்பாய் ஐயப்பா-என்
ஊழ்வினையைத் தீர்த்தருள்வாய் உத்தமனே ஐயப்பா.

காக்க ... காக்க ...

சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

எப்போதும் என் தலை நின் தாழ் பணிந்திட தப்பாது காக்க வேண்டும்
கொட்டிக் கொடுக்கின்ற திருநீறு அணிந்திட நெற்றியை காக்க வேண்டும்
தத்துவம் காட்டிடும் முத்திரை திருக்கரம் நிற்புருவம் காக்க வேண்டும்
சத்திய தயாநிதி அன்னதானப் பிரபு சபரிமாமலை சுவாமியே

விழிகளால் நின் பேரழகினைப் பருகிட விழிகளை காக்க வேண்டும்
இமை சற்றும் அசையாமல் இருக்கின்ற பாலனே இமைகளை காக்க வேண்டும்
மொழிகளால் நின் திருப்புகழினைப் பாடிட இதழ்களைக் காக்க வேண்டும்
அழியாத செல்வமே அகலாத தெய்வமே அழுதமலையின் அதிபனே

நந்தா விளக்காக நெஞ்சிலே நின்றவா நாசியைக் காக்க வேண்டும்
நாவுள்ள வரையிலும் நடுநிலை தவறாமல் வார்த்தையை காக்க வேண்டும்
செந்தாமரைக்கரம் செந்தேந்தி அமர்ந்தவா செவிகளை காக்க வேண்டும்
சித்துக்கள் விளையாடும் அற்புதக் கற்பகம் அச்சங்கோவில் அரசே

முத்துச் சிரிப்பினால் பித்தாக்கும் மூர்த்தியை பற்களை காக்க வேண்டும்
தப்பித் தவறி நான் சொல் பிதறி பேசாமல் சொற்களை காக்க வேண்டும்
கட்டுக் கடங்காத கட்டழகு காளையே கன்னங்கள் காக்க வேண்டும்
எட்டுத் திசைகளிலும் கொடி கட்டி ஆள்கின்ற ஏகாந்த தீப ஒளியே

பின்னாலி ருந்து தெவரும் பிடித்தெனை தள்ளாமல் பிடரியை காக்க வேண்டும்
என்பாட்டு தேனாக எங்கும் முழங்கிட கழுத்தினை காக்க வேண்டும்
பொன்னாரம் மணியாரம் நின்னுருவம் அசைந்திட நெஞ்சினை காக்க வேண்டும்
பொன்னம்பலம் தன்னில் என்னாளும் அணைக்கின்ற பூங்காவனத் தேவனே

அன்னபூரணி எந்தன் இல்லத்திலே தங்கி அருசுவைகள் பெருக வேண்டும்
அரை வயிறு கால் வயிறு எனும் குறைகள் இல்லாது நிறைவயிறு காக்க வேண்டும்
வன்புலி வாகனன் என் தோளில் வழுவேற்றி தோள்களை காக்க வேண்டும்
வாழ்வெல்லாம் சுவாமிய சரணமென ஓதுவேன் வாபரின் தோழனே

வணங்கத் தவறாத வள்ளலே ஐயனே முழங்கைகள் காக்க வேண்டும்
வருக என வரவேற்க அருளாசி தந்து நீ முன்கையை காக்க வேண்டும்
முழு முதற்கடவுளே இருமுடிப்பிரியனே முதுகினை காக்க வேண்டும்
முருகனின் தம்பியே அரிகரன் புதல்வனே கலியுக கடவுள் நீயே

உள்ளம் கலங்காது ஊருக்கு உதவிட உள்ளங்கை காக்க வேண்டும்
வில்லாளி வீரனே நெய்விளக்கு ஏற்றிடும் விரல்களை காக்க வேண்டும்
நல்லதோர் இதயத்தை தந்து நான் நலமுற நகங்களை காக்க வேண்டும்
நாதமே, வேதமே, ஞானமே, மோனமே காந்தமலை ஜோதி நீயே

இடையிலே என் பெயரில் பழிஏதும் வாராமல் இடையினை காக்க வேண்டும்
துவண்டு நான் வீழாமல் துணிவுடன் வாழ்ந்திட துடைகளை காக்க வேண்டும்
அறியாது நான்செய்த பிழைகளை மன்னித்து குறிகளை காக்க வேண்டும்
கருணையின் வடிவமே கற்பூர ஜோதியே கரிமலை ஆளும் சீலா

கீழோர்கள் தயவுக்கு மண்டி போடாமல் என் முழங்கால்கள் காக்க வேண்டும்
காட்டுவழி சென்றாலும் நின் சங்கு சக்கரம் கணுக்கால்கள் காக்க வேண்டும்
நீ வாழும் மலையேற இறுதிவரை தளராது பாதங்கள் காக்க வேண்டும்
நிழலாக குளிர்தந்து நினைத்ததை கொடுத்திடும் சமரச குருநாதனே

காலையிலும் மாலையிலும் அந்தி சந்தி வேளையிலும் கால்விரல்கள் காக்க வேண்டும்
காலன் எனைப்பாராமல் போவதற்கு வழி சொல்லி கவலைகள் தீர்க்க வேண்டும்
யாருக்கும் குனியாமல் ஐயப்பா எனும் நாமம் அச்சத்தை போக்க வேண்டும்
சீர்மேவு சபரிமலை வீரமணிகண்டனே நீதான் என் கவசமய்யா...எனைக் காக்கும் கவசமய்யா..

சுவாமியே சரணம் ஐயப்பா
சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
சரணம் ... சரணம்.... ஐயப்பா

பஜனை பாடல்கள்

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷ்மாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷ்மாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷ்மாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷ்மாம்

மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷ்மாம்

ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ரக்ஷ்மாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷ்மாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷ்மாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீச சபரிகிரீச சபரிகிரீச ரக்ஷ்மாம்

வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ரக்ஷ்மாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷ்மாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷ்மாம்

கணேசா சரணம்

1. கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா  (கணேசா)

2. கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

3. சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

4. சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

5. முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

6. அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

7. கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

8. மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

9. பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)

பிள்ளையார் துதி

1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்

4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்

7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.

அரிஹரோ ஹரா சுவாமி

அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா
அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா

1. திருப்பரங் கிரி தீரனுக்கு அரஹரோஹரா
தெய்வயானை மணாளனுக்கு அரஹரோஹரா
செந்தில் வளர் கந்தனுக்கு அரஹரோஹரா
செஞ்சுடர் வேல் வேந்தனுக்கு அரஹரோஹரா

2. பழனிமலை வேலனுக்கு அரஹரோஹரா
பாலா பிஷேகனுக்கு அரஹரோஹரா
சுவாமிமலை நாதனுக்கு அரஹரோஹரா
சுப்ரமண்ய மாணவர்க்கு அரஹரோஹரா

3. தணிகைமலை செல்வனுக்கு அரஹரோஹரா
தனித்து நின்ற குமரனுக்கு அரஹரோஹரா
சோலைமலை முருகனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார வேலனுக்கு அரஹரோஹரா

4. கந்தன் கடம்பனுக்கு அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
சிக்கல் சிங்காரனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா

5. எட்டுக்குடி வேலனுக்கு அரஹரோஹரா
எங்குள் குல தேவனுக்கு அரஹரோஹரா
மருதமலை மன்னனுக்கு அரஹரோஹரா
மாந்தர் தொழும் மாறனுக்கு அரஹரோஹரா

6. வெள்ளிமலை வேலனுக்கு அரஹரோஹரா
வள்ளி மணாளனுக்கு அரஹரோஹரா
அபிஷேகப் பிரியனுக்கு அரஹரோஹரா
ஆனந்த வடிவனுக்கு அரஹரோஹரா

ஐயப்பசாமி - ஆறுமுகசாமி

1. சரணம் சாமி சரணம்சாமி ஐயப்பசாமி
அரோகரா அரோகரா ஆறுமுகசாமி

2. பம்பையிலே உதித்தவராம் ஐயப்பசாமி
பொய்கையிலே உதித்தவராம் ஆறுமுகசாமி
திருமாலின் திருமகனாம் ஐயப்பசாமி
திருமாலின் மருமகனாம் ஆறுமுகசாமி

3. சபரிமலை மீதிருப்பார் ஐயப்பசாமி
பழனிமலை மீதிருப்பார் ஆறுமுகசாமி
புலிக் கொடியைக் கொண்டவராம் ஐயப்பசாமி
சேவற்கொடி அழகனையப்பா ஆறுமுகசாமி

4. ஐந்து மலைக் கதிபதியாம் ஐயப்பசாமி
ஆறு மலைக் கதிபதியாம் ஆறுமுகசாமி
வில்எடுத்து வருபவராம் ஐயப்பசாமி
வேல் எடுத்து வருபவராம் ஆறுமுகசாமி

5. காடுமலை நாடியவர் ஐயப்பசாமி
குன்றேறி நின்றவர்தான் ஆறுமுகசாமி
வாபரைத் துணைக்கொண்டார் ஐயப்பசாமி
பாகுவைத் துணைக்கொண்டார் ஆறுமுகசாமி

6. சரண கோஷ பித்தராம் ஐயப்பசாமி
அரோகர பித்தராம் ஆறுமுகசாமி
மகிஷியைக் கொன்றவராம் ஐயப்பசாமி
சூரனை வென்றவராம் ஆறுமுகசாமி

7. இன்று வரை பிரம்மச்சாமி ஐயப்பசாமி
இருதாரம் கொண்டவராம் ஆறுமுகசாமி
இருமுடி பிரியனையா ஐயப்பசாமி
காவடி பிரியனையா ஆறுமுகசாமி

8. நெய்யா அபிஷேகராம் ஐயப்பசாமி
பாலா அபிஷேகராம் ஆறுமுகசாமி
ஊமைக் கருள் புரிந்தவராம் ஐயப்பசாமி
ஒளவைக்கு உபதேசித்தவர் ஆறுமுகசாமி

9. புலியேறி வருபவராம் ஐயப்பசாமி
மயிலேறி வருபவராம் ஆறுமுகசாமி
பாணக்க பிரியராம் ஐயப்பசாமி
பஞ்சாமிர்தப் பிரியராம் ஆறுமுகசாமி

10. தை மகர கீர்த்தியவர் ஐயப்பசாமி
தை பூச மூர்த்தியவர் ஆறுமுகசாமி
அருள் வழங்கும் வள்ளலவர் ஐயப்பசாமி
அழகு தமிழ் ஆனழகர் ஆறுமுகசாமி

சமயபுரம் மாரியம்மா

1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா  (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

சன்னதியில் கட்டுங்கட்டி

1. சன்னதியில் கட்டுங்கட்டி தன்னே னானான - நாங்க
சபரிமலை பயணமுங்க தில்லேலே லேலோ

2. கார்த்திகையில் மாலைப்போட்டு தன்னே னானான - நாங்க
கடும் பயணம் போறோமுங்க தில்லேலே லேலோ

3. மார்கழியில் கட்டுந்தாங்கி தன்னே னானான - நாங்க
மணிகண்டனைப் பார்க்க போறோம் தில்லேலே லேலோ

4. எரிமேலியில் பெட்டை துள்ளி தன்னே னானான - நாங்க
ஏறிடுவோம் சபரிமலை தில்லேலே லேலோ

5. அழுதையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
அன்னதானம் மிட்டிடுவோம் தில்லேலே லேலோ

6. பம்பையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
சக்தி பூஜை கொண்டாடுவோம் தில்லேலே லேலோ

7. ஐந்து மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
ஐயப்பனை காணப் போறோம் தில்லேலே லேலோ

8. மலையாம் மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
மகர ஜோதி காணப் போறோம் தில்லேலே லேலோ

9. பதினெட்டாம் படியேறி தன்னே னானான - நாங்க
பாவங்களைத் தீர்க்க போறோம் தில்லேலே லேலோ

தள்ளாடித் தள்ளாடி

தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க
சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

1. கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும் சரணங்கள் சொல்லிகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

2. இருமுடியைக் கட்டிகிட்டு இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு (தள்ளாடி)

3. வேட்டைகளும் துள்ளி கிட்டு வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்கள் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் (தள்ளாடி)

4. காணாத காட்சியெல்லாம் கண்ணாரக் கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையாத் தாண்டிகிட்டு
பம்பையில் குளித்து விட்டு பாபமெல்லாம் போக்கி விட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகள் பாடிக்கிட்டு (தள்ளாடி)

5. நீலிமலை ஏற்றத்திலே நின்று நின்று ஏறிக்கிட்டு
நெஞ்சம் உருகி உன்னை நினைச்சுமே பார்த்துகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே (தள்ளாடி)

6. படியேறி போகும் போது பாங்காகக்காய் உடைத்து
பாலனான உந்தனையே பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிக்கும் போது நேரிலேயே பார்த்து கிட்டு
ஐயா சரணம் என்று அலறியடிச்சுக் கிட்டு (தள்ளாடி)

அல்லி மலர் வாசமது

1. அல்லி மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஹரி ஹர புத்திரனின் மேலே மணக்குது

2. அத்தர் புனுகு வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமியின் மேலே மணக்குது

3. மல்லிகை பூ மரிக்கொழுந்து எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மணிகண்ட சுவாமியின் மேலே மணக்குது

4. முல்லை மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மோகன பாலனின் மேலே மணக்குது

5. ரோஜா மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ராஜாதி ராஜனவன் மேலே மணக்குது

6. காட்டுமல்லி நாட்டுமல்லி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
கருணாகர மூர்த்தியின் மேலே மணக்குது

7. பரிமள சாம் பிராணி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
எரிமேலி சாஸ்தாவின் மேலே மணக்குது

8. கற்பூர வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
காந்தமலை வாசனவன் மேலே மணக்குது

9. சந்தன வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
சபரி கிரி மலையின் மேலே மணக்குது

10. குங்குமப் பூ ஜவ்வாது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
குளத்துப் புழை பாலகனின் மேலே மணக்குது

11. பன்னீரும் குல் கந்தும் எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
பந்தள செல்வனவன் மேலே மணக்குது

12. மகர மாதம் ஜோதியது எங்கே தெரியுது
அது எங்கே எங்கே தெரியுது
கரந்தமலை உச்சியின் மேலே தெரியுது

13. மஞ்ச பொடி மகிமையது எங்கே தெரியுது
அங்கே எங்கே எங்கே தெரியுது
மஞ்ச மாதா தேவியவள் மேலே தெரியுது

14. விபூதி அபி÷க்ஷகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
வீரமணிகண்டன் மேலே நடக்குது

15. நெய்யா அபிஷேகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
சாஸ்தாவாம் ஐயப்பனின் மேலே நடக்குது

16. சரண கோஷ சப்தமது எங்கே ஒலிக்குது
அது எங்கே எங்கே ஒலிக்குது
சுவாமியாம் ஐயப்பன் மலையில் ஒலிக்குது.

சாமி சாமி ஐயப்பா

1. சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா
சபரிமலை ஐயப்பா சாஸ்தாவே ஐயப்பா

2. அச்சங்கோயில் அரசனே சாமி சாமி ஐயப்பா
ஆதரிக்க வேண்டுமையா சபரிமலை ஐயப்பா

3. குளத்துப்புழை பாலகரே சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

4. கணபதியின் தம்பியே சாமி சாமி ஐயப்பா
கவலைகளைப் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

5. வாபரின் கோட்டை ஐயாசாமி சாமி ஐயப்பா
வரங்களையே கொடுக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

6. காளைகட்டி ஆஸ்ரமம் சாமி சாமி ஐயப்பா
களைப்பார வந்து நின்றோம் சபரிமலை ஐயப்பா

7. அமுதா நதியிலே சாமி சாமி ஐயப்பா
ஆனந்தமாய் குளித்து வந்தோம் சபரிமலை ஐயப்பா

8. கரிமலை உச்சியிலே சாமி சாமி ஐயப்பா
கடினமாக ஏறிவந்தோம் சபரிமலை ஐயப்பா

9. பம்பா நதியிலே சாமி சாமி ஐயப்பா
பாவமெல்லாம் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

10. நீலிமலை ஏற்றத்திலே சாமி சாமி ஐயப்பா
நிற்க வைத்து பார்க்கிறியே சபரிமலை ஐயப்பா

11. சரங்குத்தி வந்தடைந்தோம் சாமி சாமி ஐயப்பா
சன்னிதானம் கண்டோமே சபரிமலை ஐயப்பா

12. நெய்யப்பிஷேகத்தோடு சாமி சாமி ஐயப்பா
நேரில் காண வந்தோம் சபரிமலை ஐயப்பா

13. குற்றம் குறை எதுவானாலும் சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா.

ஓம் குருநாதா ஐயப்பன்

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)

அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்)

ஆபத் பாந்தவா ஐயப்பா
ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்)

இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்க மிகுந்தவா ஐயப்பா (ஓம்)

ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா ஐயப்பா (ஓம்)

உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம்)

ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா (ஓம்)

எங்கும் நிறைந்தவர் ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா (ஓம்)

பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா (ஓம்)

வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா (ஓம்)

சபரிகிரீசா ஐயப்பா
சாஸ்வதரூபா ஐயப்பா (ஓம்)

பதினெட்டாம் படிகளே சரணம்

1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

வழிநடைப் பாடல்

சாமியே - ஐயப்போ
ஐயப்போ - சாமியே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் - சுவாமிக்கே
தேன் அபிஷேகம் - சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
பகவானே - பகவதியே
பகவதியே - பகவானே
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
ஏந்திவிடையா - தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா - ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே
பாதபலம் தா - தேக பலம் தா
தேகபலம் தா - பாத பலம் தா
கற்பூர தீபம் - சுவாமிக்கே
அவிலும் மலரும் - சுவாமிக்கே
காணிப்பொன்னும் - சுவாமிக்கே
இருமுடி கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - இருமுடி கட்டு
கற்பூரஜோதி - சுவாமிக்கே
சுவாமிமாரே - ஐயப்பமாரே
ஐயப்பமாரே - சுவாமிமாரே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே
ஈஸ்வரியே - ஈஸ்வரனே
ஐயப்பபாதம் - சுவாமிபாதம்
சுவாமிபாதம் - ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா - ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா - தாங்கிவிடப்பா
கடினம் கடினம் - கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் - கடினம் கடினம்
தூக்கிவிடப்பா - ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் - தூக்கிவிடப்பா
கதலி பழமும் - சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - கட்டுங்கட்டி
யாரைக்காண - சாமியைக்காண
சாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் - சுவாமிக்கே
பெருவழி பாதை - சுவாமிக்கே
கருடன் வருவது - சுவாமிக்கே
ஆபரண பெட்டி - சுவாமிக்கே
தேவன் மாரே - தேவி மாரே
தேவி மாரே - தேவன் மாரே
தேவனே - தேவியே
தேவியே - தேவனே
கடவுள் வணக்கம் - காலை மாலை
காலை மாலை - கடவுள் வணக்கம்
சுவாமியே - ஐயப்போ-ஐயப்போ சுவாமியே

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

 
மேலும் ஐயப்பன் சிறப்பு செய்திகள் »
temple news
கேரளா மற்றும்  தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரிஎண்    கோயில்    இருப்பிடம்       ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் குவியும் காணிக்கை ரூபாய்களை எண்ணும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 14 ... மேலும்
 
temple news

ஆரியங்காவில் நாளை டிசம்பர் 15,2017

பக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.அதிகாலை14:45 : திருப்பள்ளி ... மேலும்
 
temple news
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை ஒவ்வொரு மலையாள மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுகிறது என்றாலும், ... மேலும்
 
temple news
கடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar