ஆடி முதல் வெள்ளி அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2017 10:07
மதுரை: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு, திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனை, அதிகாலை 2 மணி முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ,காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடந்தன. பெண்கள் நெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். இளையான்குடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர். சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. மடப்புரம் காளி கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றுவருகிறது.