காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பச்சை மஞ்சள் அபிஷேகம் நடக்கிறது. இதற்காக, நேற்று மாலை 5:00 மணிக்கு கோயில் முன் மண்டப வளாகத்தில் மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 35 அம்மிகளில் 300 கிலோ மஞ்சளை பெண் பக்தர்கள் அரைத்தனர். இரவு 9:00 மணி வரை அரைக்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் மஞ்சள் அரைக்கின்றனர். பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு அபி ஷேகம் நடக்கிறது. வரும் 28-ம் தேதி திருவிளக்கு பூஜை, ஆக.4-ம் தேதி 1008 சங்காபிஷேகம், 11ம் தேதி கோமாதா பூஜை, அன்று மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர் செய்து வருகின்றனர்.