ஆடி வெள்ளி: புட்லூர் பூங்காவனத்தம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2017 01:07
திருவள்ளூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருவள்ளுர் அடுத்த புட்லூர் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அங்குள்ள புற்றுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். அம்மனுக்கு காலை அபிஷேகமும், புஷ்ப அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. இதேபோல் வேம்புலி அம்மன் கோவில், மூங்காத்தம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.