திருவிடைக்கழி கோயில் குளம் தூர்வாரிய போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2017 06:07
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் இக்கோயிலின் தீர்த்தக்குளமான சரவணப்பொய்கையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தொடர் ந்து நேற்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும்போது ஒரு அடி ஆழத்தில், ஆறுஅடி உயரம் உள்ள முருகன் சிலை, ஒன்னரை அடி உயரமுள்ள வினாயகர் மற்றும் அம்பாள் என மூன்று கருங்கல் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனையறிந்த பக்தர்கள் திரண்டு வந்து கண்டெடுக்கப்பட்ட சிலைகளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை என தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.