ராமநாதபுரம், ராமநாதபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. ஆடி மாதங்களில் மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோயிலில் நேற்று காலை 9:30 மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர் மதியம் 12:00 மணியளவில் அம்மனுக்கு பால் அபிஷேகமும், அதன் பின்பு சிறப்பு அலங்காரங்கள் நடந்தது. இதில் பெண்கள் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பின் அனைவருக்கும் கூழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.