திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2017 11:07
திண்டுக்கல், திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோயில், அபிராமியம்மன் கோயில், பாரதிபுரம் புவனேஸ்வரி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனர். ஆடி முதல் வெள்ளி என்பதால் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அம்மனுக்கு கூழ் காய்ச்சி அபிஷேகம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோட்டை மாரியம்மன் கோயிலில் தங்கத் தேரோட்டம் நடந்தது. கடந்தாண்டு ஆடி வெள்ளி அன்று கோட்டை மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் போது, செயின் பறிப்பு நடந்தது. இதனை தவிர்க்கும் வகையில் இந்தாண்டு டி.எஸ்.பி., சிகாமணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்ததுஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயிலில், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. இக்கோயில்களில் திரளான பெண்கள் பங்கேற்று நெய் தீபமேற்றி வழிபட்டனர்.