பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
10:07
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயில் ஆடிப்பூரவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவில் ஐந்து கருடசேவை நடந்தது.
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா ஜூலை 17 ல் துவங்கியது. முக்கிய நிகழ்வான ஐந்து கருடசேவை நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு திருஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளினார். பின் பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாளுடன் ரெங்கமன்னார் எழுந்தருளினார். பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்து வைத்தார். இரவு 10:00 மணிக்கு ஆடிப்பூரப் பந்தலில் ஐந்து கருடசேவை நடந்தது. ஆண்டாள் அன்ன வாகனத்திலும், ரெங்கமன்னார், சுந்தரராஜபெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஐந்து கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளினர். இரவு புறப்பாட்டின் போது சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்களின் ’நாம சங்கீர்த்தன பஜனை’ நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா, பட்டர்கள் முத்து, அனந்தராமன், கோவிந்தாச்சாரி, சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ், கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.