திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் பெருமானுக்கு கயிலாய காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2017 04:07
தஞ்சை : திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் பெருமானுக்கு கயிலைக்காட்சி வைபவம் நேற்று இரவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தென்கயிலாயம் என்று போற்றப்படும் ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசையன்று, அப்பர் பெருமான் என்ற திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலைக்காட்சி அளித்ததாக ஐதீகம். இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலைக்காட்சி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று இரவு, அப்பர் பெருமானுக்கு கயிலை காட்சியருள வெள்ளி ரிஷப வாகனத்தில், தர்ம சம்வர்த்தினி அம்மன் சமேத ஐயாறப்பர் எழுந்தருளினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.