பதிவு செய்த நாள்
25
ஜூலை
2017
11:07
முகுந்தகிரி: முகுந்தகிரி கோதண்டராமர் ஸ்ரீநிவாசப் பெருமான் கோவில் வளாகத்தில், பிரசாதம் தயாரிக்க, சமையல் அறை ஏற்படுத்த, பக்தர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியம், முகுந்தகிரியில், கோதண்டராமர் கோவில் உள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படும், பிரசித்தி பெற்ற இக்கோவில், அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வருகிறது.குழந்தை பாக்கியம் கிட்டும் என்ற பக்தர்களின் நம்பிக்கையை பெற்ற இந்த கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். இந்நிலையில், பிரசாதம் சமைக்க சமையல் அறை இல்லாததால், மதுராந்தகத்தில் உள்ள, கோதண்டராமர் கோவில் பாட சாலையில் பக்தர்களுக்கான உணவை தயாரித்து, இக்கோவிலுக்கு எடுத்து வந்து அன்னதானம் செய்கின்றனர்.இதனால், மீண்டும் ஏதேனும் கஷ்டம் வருமோ என, பக்தர்கள் கவலை அடைகின்றனர். எனவே, கோவில் வளாகத்திலேயே பிரசாதம் சமைத்து வழங்க, வசதிகளுடன் கூடிய சமையல் அறையும் குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.