பதிவு செய்த நாள்
25
ஜூலை
2017
11:07
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கேவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவன வளாக ஸ்ரீமுத்துமீனாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு கணபதி ேஹாமம், வித்யா ேஹாமம், அஷ்டலட்சுமி ஹோமம் மற்றும் யாகசாலையில் கோபூஜை. கஜபூஜை. பரிபூஜை, ஒட்டகபூஜைகள் நடந்தது. நேற்று காலை நாரும்பூநாதர் பட்டர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வருஷாபிசேகத்தை நடத்தி வைத்தார். கோவை கவுமார மடாதிபதி குமரகுரு சுவாமிகள், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், தென்கயிலாய உலக சமுதான ஆலய குருமகான்பரஞ்சோதி சுவாமிகள் ஆசிகள் வழங்கினர். சேர்மன் சங்கர், இணைத்தாளாளர் பழனிசெல்வி, துணைதலைவர் தங்கபிரபு, சிந்துஜா மற்றும் இணைத்தாளாளர் துர்காமீனலோசினி, தொழிலபதிபர் கமல்ராகவன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேம்பார், ஸ்ரீவி., எம்.எல்.ஏ., சந்திரபிரபா, முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுபாண்டியன், பொதிகை இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷிணி, தொழிலதிபர்கள் மகேந்திரன், மணிவாசகம், பாலு, முருகன் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.