ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணர்கோயிலில் நேற்றிரவு ஆண்டாள், ரெங்கமன்னார் சயனசேவை நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 :00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் வாகனத்தில் எழுந்தருளி கிருஷ்ணர் கோயிலை வந்தடைந்தனர். இரவு 8 :00மணிக்கு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா செய்தனர்.