காளையார்கோவில் சொர்ண வள்ளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2017 10:07
காளையார்கோவில் சொர்ண வள்ளி அம்மன் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடை பெற்றது.ஆடிபூரம் உற்சவவிழா 17 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது.
நேற்று காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 5:30 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். 9:00 மணிக்கு பொதுமக்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.
தேவஸ்தான கண்காணிப் பாளர் ராஜேந்திரன், காளீஸ்வரகுருக்கள், ஏஎல்.ஏஆர் அறக்கட்டளை நிர்வாகத்தினர், தேவகோட்டை தி.ராம.தி குடும்பத்தினர், சுப்பிர மணியன் செட்டியார் குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.