பதிவு செய்த நாள்
26
ஜூலை
2017
03:07
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலின் ஆடி குண்டம் திருவிழா, கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, பொதுப்பணித் துறையின் அம்மன் அறக்கட்டளை சார்பில், பவானி ஆற்றில் இருந்து, சப்பரத்தில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அழைத்து வரப்பட்டார்.கோவில் தலைமை பூஜாரி பரமேஸ்வரன் சிறப்பு பூஜை செய்து, 6:00 மணியளவில், குண்டம் இறங்கி, துவக்கி வைத்தார்.தொடர்ந்து, உதவி பூஜாரிகள், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள்,திருநங்கையர் என, ஏராளமானோர், மதியம், 12:15 மணி வரை குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.விழாவில், 15க்கும் மேற்பட்ட தனியார் அமைப்பினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்பட்டது. மதியம், 12:30 மணியளவில், அம்மன் அறக்கட்டளை சார்பில், அக்னி அபிஷேகம் செய்யப்பட்டது. 450 போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.