சந்திரகிரகணம்: ஆகஸ்டு 7ல் திருப்பதி கோவில் நடை 10 மணிநேரம் அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2017 06:07
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7ம் தேதி சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் அன்றிரவு 10.52 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.48 மணி வரை நீடிக்கிறது. இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அன்று மாலை 4:30 மணி முதல் மறுநாள் (8ம் தேதி) அதிகாலை 02:30 மணி வரை கோவிலில் உள்ள மகாதுவாரம் உள்பட அனைத்து நடைகளும் சாத்தப்படுகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. மேலும் லட்டு பிரசாதம், அன்னதான திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்படுககிறது. இதையடுத்து 8ம்தேதி காலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்படுகிறது. பக்தர்களின் தரிசனத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் வழக்கம்போல கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம்.மேலும் 7-ந் தேதி அன்று நடைபெறும் கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெறாது. இந்த சந்திரகிரகணம் சாதாரண கிரகணம் ஆகும். இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.