திருப்பதி : திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் 23/9/2017ந்தேதி துவங்கி 01/10/2017 ந்தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற உள்ளது. வருடம் முழுவதும் திருமலையில் திருவிழாதான் என்றாலும் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரம்மாண்ட விழாவாகும். ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் இரவில் உற்சவரான மலையப்பசுவாமி விதம் விதமான வாகனங்களில் பல்வேறு அலங்காரங்களின் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இந்த ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.அதிலும் ஐந்தாம் நாளான்று நடைபெறும் கருடவாகன சேவையைக் காண பல லட்சம் பக்தர்கள் வருவர்.விழா நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து வரும் கலைக்குழுவினர் மாடவீதிகளில் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் காணக்கண்கொள்ளக்காட்சியாகும்.
பிரம்மோற்சவ விழா பற்றிய விவரமாவது:
முதல் நாள்: 22/9/17 பகல்: கொடியேற்றம்,இரவு:பெரிய சேஷவாகனம் இரண்டாம் நாள்: 23/9/17 காலை:சின்ன சேஷ வாகனம், இரவு :ஹம்ஸ வாகனம் மூன்றாம் நாள்: 24/9/17 காலை:சிம்ம வாகனம், இரவு :முத்துபல்லக்கு வாகனம் நான்காம் நாள்: 25/7/17 காலை:கற்பகவிருட்ச வாகனம், இரவு :சர்வபூபாள வாகனம் ஐந்தாம் நாள்: 26/7/17 காலை :மோகினி அலங்காரம், இரவு :கருட வாகனம் ஆறாம் நாள்: 27/7/17 காலை: அனுமந்த வாகனம், மாலை :தங்க ரதம, இரவு :கஜவாகனம் ஏழாம் நாள்: 28/7/17 காலை :சூர்ய பிரபை வாகனம், இரவு :சந்திர பிரபை வாகனம் எட்டாம் நாள்: 29/7/17 காலை :தேரோட்டம், இரவு :குதிரை வாகனம் ஒன்பதாம் நாள்: 30/7/17 காலை :சக்ரஸ்நானம், மாலை :கொடியிறக்கம் விழா நிறைவு.