திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2017 11:08
திருவண்ணாமலை: ஆடி மாத பவுர்ணமியை யொட்டி, ஆக., 6 இரவு கிரிவலம் வர உகந்த நேரம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.ஆடி மாத பவுர்ணமி, ஆக.6 இரவு 11:31 மணிக்கு துவங்கி, மறுநாள் திங்கட்கிழமை இரவு 12:02 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.