பதிவு செய்த நாள்
05
ஆக
2017
02:08
திருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருப்பூரில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. வரலட்சுமி நோன்பிருந்து, பெண்கள் அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆன்மீக மாதமான ஆடியில் வரும் வெள்ளிக்கிழமைகள், அம்மனுக்கு உகந்தவையாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமையான , கோவில்களில் பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், பன்னீர் உள்ளிட்டவற்றால், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் நடந்தன. பிரசாதங்களும், அம்மனுக்கு கூழ் வார்க்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், அவிநாசிகவுண்டன்புதூர் மாகாளியம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாகாளியம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், திருநீலகண்டபுரம் மாகாளியம்மன் கோவில், ஓம் சக்தி கோவில் என அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஓம் சக்தி கோவிலில், பக்தர்களுக்கு மாங்கல்ய பொருட்கள் மற்றும் பிரசாதம்வழங்கப்பட்டது. ஆடி வெள்ளி மட்டுமின்றி, வரலட்சுமி நோன்பு நாளும் கொண்டாடப்பட்டதால்,ஏராளமான பெண்கள், விரதமிருந்து, அம்மனை வழிபட்டனர்.
இதேபோல், அவிநாசி, பல்லடம், பொங்கலூர் வட்டாரத்திலுள்ள கோவில்களிலும்,
ஆடி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பு வழிபாட்டில், பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.