பதிவு செய்த நாள்
05
ஆக
2017
03:08
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், உலக நன்மைக்காக, 22ம் ஆண்டு நவசண்டியாகம் துவங்கியது. ஓசூர், தேர்ப்பேட்டை மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவிலில், உலக நன்மைக்காக மகா நவசண்டியாகம், காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன், காலை, 10:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு தேர்ப்பேட்டை பச்சைக்குளத்தில் இருந்து நீர்க்குடம் புறப்படுதல், மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி நடந்தது. காலை, 8:00 மணிக்கு கலச பூஜை, ருத்ர ஹோமம், 10:00 மணிக்கு முதற்கால மகா நவசண்டியாகம் நடக்கிறது.