கடும் வெயிலால் நவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2017 12:08
தேவிபட்டினம்: கடும் வெயில் மற்றும் அனல் காற்றால் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை இன்றி காணப்பட்டது. தேவிபட்டினம் நவபாஷாணத்தில் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், தர்ப்பணம், ஏவல் உள்ளிட்டவைகளுக்கும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்து வருவதாக பக்தர்கள் நம்புவதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நவபாஷாணத்தில் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று இப்பகுதியில் நிலவிய கடும் வெயில் மற்றும், அனல் காற்றால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து நவபாஷாண பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் மாலை 4:00 மணிக்கு மேல் இயல்பான முறையில் பக்தர்கள் வருகை இருந்தது.