Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீங்கள் அளப்பதே உங்களுக்கும் ... முதலாளியின் பொருளுக்கு பொறுப்பாளர் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவனமாக செயல்படுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
04:08

இயேசுவின் முள்கிரீடம் அவருக்கு பரிசாகத் தரப்பட்ட தோட்டத்தில் வளர்ந்த முட்செடியில் இருந்தே செய்யப்பட்டது என்ற தகவலை ஒரு கதை உறுதிப்படுத்துகிறது. சிமியோன் என்பவன் தனக்கு தொழுநோய் இருப்பதாகவும் அதை குணமாக்கித் தரும்படியும் இயேசு கிறிஸ்துவிடம் முறையிட்டான். அவர் அவனிடம், “உன்னைக் குணப்படுத்த எனக்கு வல்லமை உண்டு என நம்புகிறாயா?” என்று கேட்டார்.அவனும் ஆம் என்றான். நீ நம்பியபடியே உன் தொழுநோய் நீங்கி சுகம் பெறுவாய் என்றார் இயேசு. அப்படியே சுகம் பெற்றான். சிமியோன் இயேசுவிடம் “ஆண்டவரே! என்னைக் குணமாக்கியதற்கு நன்றிக் காணிக்கையாக நான் ஒரு சிறிய திராட்சைத் தோட்டத்தைத் தருகிறேன். அதை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வேண்டினான்.

அது தனக்கு வேண்டாம் என்றார் இயேசு. ஆனாலும், வற்புறுத்தி அவரிடம் கொடுத்து விட்டான். அந்த தோட்டத்தில் ஒரு முள்செடி இருந்தது. அதை முழுமையாக அகற்றிவிடும்படி அவர் சீயோனிடம் சொன்னார். அவனும் வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். அவர்கள் வேரோடு அதை அகற்றாமல் மேல் பகுதியை மட்டும் வெட்டி சென்று விட்டனர். அந்தச் செடி மீண்டும் முளைத்து விட்டது. பிற்காலத்தில் இயேசுவின் மீது பல புகார்களைக் கூறிய தலைமை குரு, அவரது தலையில் முள் கிரீடம் வைக்க ஆணையிட்டார். ஒரு போர்வீரன் இயேசுவின் தோட்டத்திற்குச் சென்று, அந்த முள்செடியை வெட்டி அதைக் கொண்டே கிரீடம் செய்து அவரது தலையில் வைத்து அழுத்தினான். அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. சிமியோன் அழுதுகொண்டே “ஆண்டவர் சொன்னபடி, முழுமையாக அந்தச் செடியை அகற்றாமல் விட்டுவிட்டேனே” என புலம்பினான். நம் தவறுகளையும் பாவங்களையும் வேரோடு அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது நம்மையே திருப்பித் தாக்கும். மேலும், நம் செயல்பாடுகள் அரைகுறையாக இருக்கக்கூடாது. அது நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் துன்பம் தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar