பதிவு செய்த நாள்
11
ஆக
2017
01:08
திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்ட இந்துமுன்னணி செயற்குழுக் கூட்டம் மாநில நிர்வாக குழுஉறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் மாரிமுத்து, செயலாளர் சங்கர்கணேஷ், கோவை செயலாளர் கோவிந்த் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் கோயிலை தரிசிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, ஆக., 16ம் தேதி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நடைபெறும் மலைக்கோட்டை அபிராமி அம்மன் கோயிலுக்கு தரிசன யாத்திரையில் திரளாக பங்கேற்பது, விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆக.,17ல் விரதம் துவக்குவது, மாவட்டத்தில் 10 நகரங்களில் பொது ஊர்வலம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சஞ்சீவிராஜா, செயற்குழு உறுப்பினர் வினோத்ராஜ் பங்கேற்றனர்.