பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனைவிழா ஜூலை 17ல் துவங்கி ஆக.,10 வரை நடந்தது. ஆடி 1ல் சிவன், விநாயகரிடம் அனுமதி வாங்கி பெரியநாயகிஅம்மன் சன்னதியில் சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து தினமும் மாலை 6:30 மணிக்கு மேல் அம்மனுக்கு நுாறாயிரம் மலர்களால் சிறப்பு லட்சார்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை லட்சார்ச்சனை வேள்வியில் புனிதநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், 1008 சகஸ்கர நாம வழிபாடு, சுமங்கலி பூஜை நடந்தது. வெள்ளித் தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரியநாயகியம்மனுக்கு அபிஷேகமும், தங்கக்கவச அலங்காரம் செய்து இரவில், நான்கு ரதவீதிகளிலும் வெள்ளித் தேரோட்டம் நடந்தது. ஏற்பாடுகளை இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ)மேனகா செய்தனர்.