திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயில் ஆடிவெள்ளி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2017 11:08
திருப்புத்துார், திருப்புத்துார் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிமாத கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று நடந்த ஆடிவெள்ளித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். திருப்புத்துார் மேற்கு எல்லைத் தெய்வமாக ராஜகாளியம்மன் எழுந்தருளியுள்ளார். ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பக்தர்கள் விழா எடுக்கின்றனர். நேற்று கடைசி வெள்ளியை முன்னிட்டு காலை 9:00மணிக்கு செட்டியதெரு ராமர் மடத்திலிருந்து பக்தர்கள் பால்குடம்,காவடிகள் எடுத்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோயில் வந்தனர். கோயிலுக்கு முன்பாக உள்ள பூக்குழியில் பல காவடிகளுடன் பக்தர்கள் இறங்கி தீ மிதித்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் துவங்கியது. மாலையில் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பூச்சொரிந்து வழிபட்டனர்.