பதிவு செய்த நாள்
12
ஆக
2017
11:08
போடி, ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பெண்கள் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
* போடி மேலத்தெரு சவுடேஸ்வரி அம்மன், நந்தவனம் காளியம்மன், சாலைக்காளியம்மன், சுப்பிரமணியர் கோயில் துர்க்கை அம்மன், புதுக்காலனி ஆதிபாரசக்தி கோயிலில் பராசக்தி உட்பட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் கூழ்காய்ச்சி வழிபட்டனர்.
* போடி அருகே விசுவாசபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு நெற்கதிர் அலங்காரம், அபிஷேகம், தீப ஆராதனைகள் நடந்தது. அம்மனுக்கு கூழ்காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மலைமீதுள்ள வடமலைநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.