பழநி: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. திருஆவினன்குடி கோயில் துர்க்கையம்மன், மகிஷாசுரமர்த்தினி அம்மன் மற்றும் நெய்க்காரப்பட்டி ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் உட்பட பல அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், பொங்கல், கூழ் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பெண்கள் நெய்தீபம், மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.