பதிவு செய்த நாள்
12
ஆக
2017
12:08
ஆர்.கே.பேட்டை: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மன் கோவில்களில் சிறப்பு, அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அம்மையார்குப்பம் காமாட்சியம்மனுக்கு பாலாபிஷேகமும், சத்தியம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகமும் நடந்தது. நான்கு வாரங்களாக, அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா கோலாகலமாக நடக்கிறது. ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மையார்குப்பம் காமாட்சியம்மனுக்கு, திரளான பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்து அபிஷேகம் செய்தனர்.
பாலாபிஷேகம்: காலை, 10:00 மணிக்கு துவங்கிய பால்குடங்களின் ஊர்வலம், பகல், 12:00 மணிக்கு, கோவில் வளாகத்தை வந்தடைந்தது. மூலவர் காமாட்சியம்மனுக்கு, பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், 1,008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. உற்சவர் காமாட்சியம்மன் வீதியுலா எழுந்தருளினார். இதே போல், அம்மையார்குப்பம் சத்தியம்மனுக்கு மஞ்சள் நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மத்துாரம்மன் கோவிலில், மூலவருக்கு பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில், காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, திரளான பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு படைத்தனர்.மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன.