திருவாடானை, மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா நடந்தது. திருவாடானை அருகே ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயிலில் கடந்த ஆக.2ல் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி நேற்று நடந்தது. சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பால்,பறவை,வேல் காவடிகள் எடுத்து பூக்குழி இறங்கினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு ஆலயம் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.