பதிவு செய்த நாள்
12
ஆக
2017
12:08
தர்மபுரி: மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி.,ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. எஸ்.வி., ரோடு, கடைவீதி, மகாத்மா காந்திசாலை, வெளிபேட்டைதெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் சிவசுப்பிரமணியம் செய்தார். இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேரகணபதி கோவில், நெசவாளர்காலனி சக்திவிநாயகர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், காரிமங்கலம் ராஜகணபதி கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு நேற்று, சிறப்பு பூஜைகள் மற்றும் அபி?ஷக அலங்காரங்கள் நடந்தன.
* கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோடு சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் முத்துமணி அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.