* திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் கோயிலில் உள்ள கண்ணன் விக்ரகம், நேபாளத்தில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளகிராம கல்லினால் ஆனது. * கேரளா குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் பாதாள அஞ்சனம், மூலிகையினால் உருவானவர். * ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோயிலில் எட்டு யானை, எட்டு நாகம், ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சந்தானகோபாலர் அருள்பாலிக்கிறார். * அம்பலப்புழா கிருஷ்ணன், திருப்பணித்துரா வேணுகோபால சுவாமி, குருவாயூர் கிருஷ்ணன் ஆகிய மூன்று சிலைகள் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டவை. இந்த மூன்று கோயிலிலும் பிரசாதமாக பால்பாயசம் வழங்கப்படுகிறது. * குஜராத் மோட்ச துவாரகையில் உள்ள கிருஷ்ணருக்கு மணிக்கு ஒருமுறை உடை மாற்றி அலங்காரம் செய்வர். ஒருநாளில் 17 முறை நைவேத்யம் படைக்கப்படுகிறது. * குஜராத் பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அர்ச்சகர் காலில் தண்டை அணிந்து, சேலை கட்டி பூஜை செய்கிறார். இது வேறெங்கும் காண முடியாத அதிசயம்.