பதிவு செய்த நாள்
14
ஆக
2017
11:08
திருப்பதி: கர்ப்பிணிகளுக்கு சீமந்தம் செய்வது போல், தான் வளர்த்த பசுவிற்கும், ஒருவர் சீமந்தம் செய்துள்ளார். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் வசிக்கும் நரசிம்மலு, பசு ஒன்றை வளர்த்து வருகிறார்; அந்த பசுவுக்கு, அவர் தினமும் பூஜை செய்து வணங்கி வருகிறார். இந்நிலையில், அந்த பசு, கர்ப்பம் தரித்தது. பெண்கள் கர்ப்பமானால், குடும்பத்தினர், அவர்களை எவ்வாறு கவனிப்பரோ, அதுபோல் பசுவையும், அவர் கவனித்து வந்தார். நிறை மாதம் வந்த பின், பசுவுக்கு பட்டு சேலை கட்டி, மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து, பூமாலை, கண்ணாடி வளையல் அணிவித்து, கர்ப்பிணிகளுக்கு, சீமந்தம் செய்வது போல், சீமந்தம் நடத்தி வைத்தார். அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள், அந்த பசுவை, சுற்றி வந்து வழிபட்டனர்.