பதிவு செய்த நாள்
14
ஆக
2017
12:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில், உழவாரப்பணிக் குழுவினர், நேற்று, உழவாரப்பணியை மேற்கொண்டனர். சமய நுால்களில், திருக்கச்சியேகம்பம்- அழைக்கப்படும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், நேற்று பல்வேறு உழவாரப்பணியைச் சேர்ந்தோர் கோவிலை சுத்தப்படுத்தினர். காஞ்சிபுரம் திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை அமைப்பினர், ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தினர். அதுபோல, சிதம்பரத்தைச் சேர்ந்த நடராஜர் உழவாரப்பணிக்குழு, நெல்லை மாவட்டம், புளியங்குடி, வாசுதேவநல்லுார் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அப்பர் சுவாமிகள் உழவாரப்பணிக்குழுவைச் சேர்ந்த சிவனடியார்கள், ஏகாம்பரநாதர் கோவில் தரைப்பகுதியை சுத்தம் செய்தனர்.
கடந்த, 2007 முதல், ஒவ்வொரு ஆங்கில மாதம், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில், கோவில்களில் உழவாரப்பணி செய்கிறோம். எங்கள் அமைப்பின், 10ம் ஆண்டுவிழாவையொட்டி, 132 கோவிலாக ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி செய்கிறோம். கோவில்களில், உழவாரப்ணி மேற்கொள்ள விரும்புவோர், 94454 08153, 97512 35808 என்ற எண்களில் அழைக்கலாம். ஜெ.கவியரசு திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை, காஞ்சிபுரம்