பதிவு செய்த நாள்
14
ஆக
2017
02:08
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில் ஆடி கிருத்திகை விழா நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. திருப்போரூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் வரும் கிருத்திகை விழா முக்கிய விழாவாக நடைபெறுகிறது. அந்த வகையில், நாளை, ஆடி கிருத்திகை விழா நடைபெறுகிறது. விழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை, 4:00 மணிக்கு உற்சவருக்கு மஹா அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு சுவாமியின் திருவீதியுலாவும் நடைபெறும். முன்னதாக, இன்று பரணி உற்சவத்தையொட்டி, மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.