தேவதானப்பட்டி: சில்வார்பட்டியில் மழைவேண்டி சிறுவர்களுக்கு சேத்தாண்டி வேடமிட்டு, பெண்கள் மடி ஏந்தி வழிபாடு நடத்தினர்.சில்வார்பட்டியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. குறிப்பாக வெற்றிலைக் கொடிக்கால் வேலையில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இக்கிராமத்தின் நீராதாரமாக உள்ள சிறுகுளம் கண்மாய், வராகநதியில் வரும் நீரை ஆதாரமாக கொண்டு நிரப்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வராகநதி வறண்டதால் சிறுகுளம் கண்மாய் நிறையவில்லை. கண்மாயின் நீர்ப் பிடிப்பு பகுதயில் குடிநீருக்காக 900 அடிவரை ஆழ்துளை கிணறு அமைத்தும் நீர் இல்லை. விவசாயப்பணிகள் முடங்கிக்கிடக்கிறது. தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் நாகம்பட்டியில் உள்ள எர்ரம்மாள் கோயிலில் பொங்கல் வைத்து கூல் வழங்குவதற்காக சில்வார்பட்டி சிறுவர்களுக்கு சேத்தாண்டி வேடமிட்டு பெண்கள் மடி ஏந்தி வழிபட்டனர்.