பதிவு செய்த நாள்
14
ஆக
2017
04:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, திரளாக வந்த பக்தர்கள், மூன்று மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், மலைப் படிகள் வழியாக சரவணபொய்கை திருக்குளத்தில் எழுந்தருளி, மூன்று முறை குளத்தை சுற்றி வலம் வந்தார். திரளான பக்தர்கள் மொட்டை அடித்தும், காவடிகளுடன் வந்தும், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆக.15ல் ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்ப திருவிழாவும் நடக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்கிறது. கார். வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், சீருந்து பாஸ் வழங்கப்பட்டுள்ளது.