பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஆஞ்சநேயர் கோவிலில் கோ பூஜை விழா நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், கோகுலாஷ்டமியை முன்னிட்டு 127 கோ பூஜை விழா நடந்தது. அதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து. கோ பூஜையை, ரங்காச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்தார். பு.முட்லுாரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில், சடகோபன் கல்யாணராமன் சுவாமிகள், கோலாச்சாரியார் சுவாமிகள், விவசாய சங்க தலைவர் விஜயகுமார், உத்திராபதி, செந்தமிழ்ச்செல்வி ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ராம அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை தலைவர் சீனு என்கிற ராமதாஸ் செய்திருந்தார்.