முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், கமுதி பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பொதுமக்கள் கண்ணன் கோயிலில் பொங்கல் வைத்தல், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், கலைநிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடந்தது. முதுகுளத்தூர் அருகே புளியங்குடியில் அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், செல்வநாயகபுரத்தில் முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., பாண்டி, பூக்குளத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் மயிலேறிவேலன் உட்பட பலர் பங்கேற்றனர்.